மழைநீரை சேகரிக்க அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் -இறையன்பு
Sep 17 2021 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பே சிறப்பு திட்டத்தின் மூலம் மழைநீரை சேகரிக்க அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் திரு. இறையன்பு வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பண்ணை குளங்கள், மழைநீர் தேங்கும் குளங்கள், அகழிகள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கிராம புறங்களில் நீராதாரங்களை பெருக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.