திருச்சி அரசு மருத்துவமனையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
Sep 17 2021 8:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா காலத்தில் திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் 45 தற்காலிக செலிவியர்கள் பணியாற்றியுள்ளனர். பணி நிரந்தரம் செய்யப்படுமென்ற அறிவிப்பால் நம்பிக்கையுடன் இருந்த அவர்கள், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டனர். தற்போது வரை பணி வழங்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த 45 தற்காலிக செலிவியர்கள், அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.