காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்
Sep 17 2021 8:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உள்ளிட்டோர் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்த யோகேஷ் என்ற சிறுவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.