திருவண்ணாமலை: ரோடு ரோலர் இயந்திரத்தால் அழிக்கப்பட்ட போலி மதுபான பாட்டில்கள்
Sep 17 2021 8:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலி மது பானங்கள் அதிக அளவு விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பறிமுதல் செய்த எரிசாராயம் கலந்த 762 போலி மது பாட்டில்கள் கலால் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட கலால் உதவி ஆணையர் உத்தரவின்படி, அந்த மது பாட்டில்களை தரையில் அடுக்கி வைத்து, ரோடு லோலர் இயந்திரத்தால் ஏற்றி அழித்தனர். பிறகு துப்புரவு பணியாளர்களை கொண்டு நசுக்கப்பட்ட கண்ணாடி பாட்டில் கழிவுகளை அப்புறப்படுத்தப்பட்டது.