ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு
Sep 17 2021 8:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 3-வது நீதிபதியான நிர்மல்குமார் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.