அக்.29-ல் தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா : சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வழி நெடுகிலும் பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்கியும் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Oct 27 2021 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, வழிநெடுகிலும் கழகக்‍ கொடிகளுடன், பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்கியும், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய கழகம் சார்பில், வெளியம்பாக்கம் ஒன்றிய செயலாளர் திரு. எஸ்.எம்.அருள் தலைமையில், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

விழுப்புரம் புறவழிச்சாலையில், விழுப்புரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் அருகே திரண்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க என முழக்‍கங்கள் எழுப்பியும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் அமமுக மாநில இளைஞர் பாசறை செயலாளர் திரு.அய்யனார், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் திரு.மெடிக்கல் ராஜி, விழுப்புரம் நகர செயலாளர் திரு. டிம்மி. சக்திவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.ஜெயபால், திரு.கோதண்டம், திரு.சுபாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வடாலப்பாக்கம் அருகில், புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஆண் குழந்தைக்கு "ஜெயச்சந்திரன்" என புரட்சித் தாய் சின்னம்மா பெயர் சூட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பரிக்கல் பகுதியில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு புரட்சித் தாய் சின்னம்மாவிற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். அப்போது பரிக்கல் ஆஞ்சநேயர் கோயில் குருக்‍கள், சின்னம்மாவிற்கு பிரசாதம் வழங்கினார்.

உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே, முன்னாள் அமைச்சர் திரு. ஆனந்தன் தலைமையில், ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மங்கள வாத்தியம் முழங்க, ஆளுயர மாலை அளித்து புரட்சித் தாய் சின்னம்மாவிற்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். முன்னதாக உளுந்தூர்பேட்டை துர்க்கை அம்மன் கோயிலில் புரட்சித்தாய் சின்னம்மா பெயரில் அர்ச்சனை செய்த பிரசாதமும் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில், கழகக்‍கொடியுடன் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மலர்க்‍கொத்து வழங்கியும் சின்னம்மாவுக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒன்றியச் செயலாளர் திரு. ஜெயகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் திரு.அருண், மாநில நெசவாளர் அணித் தலைவர் திரு.S.S. அரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில், சின்னம்மாவுக்‍கு, சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரசாதம் வழங்கி கழக தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது தொண்டர் ஒருவர், புரட்சித் தாய் சின்னம்மாவின் புகைப்படத்தில் கையெழுத்து இடுமாறு கேட்டார். அதனைத் தொடர்ந்து சின்னம்மா, அந்தப் புகைப்படத்தில், "என்றும் அம்மா வழியில்" என குறிப்பிட்டு கையெழுத்திட்டார்.

இதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்டம் துவாக்குடி டோல்கேட் அருகில், சிலம்பப் போட்டியில் பதக்‍கம் வென்ற மாணவர்கள், சின்னம்மாவை சந்தித்தனர். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பரிசு வென்ற மாணவர்கள், பதக்கங்களுடன் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது புரட்சித் தாய் சின்னம்மா, மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00