மதுரை அருகே ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக குற்றம் சாட்டி, சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய பொதுமக்கள் - மளிகை கடைகளில், ரேசன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்
Oct 27 2021 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அருகே, ரேசன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டி, அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேசன் கடையில், பல மாதங்களாக தரமற்ற அரிசி, பருப்புகளை விநியோகிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ரேசன் பொருட்களை அருகில் உள்ள மளிகை கடைகளுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகவும் கூறி, ரேசன் அரிசியை சாலையில் கொட்டி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்நடைகளுக்கு கூட வழங்க முடியாத அளவிற்கு தரமற்ற அரிசியை விநியோகிப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள், இது குறித்து புகார் அளித்தால் காவல்துறையினர் மூலமாக பொய் வழக்கு பதிவு செய்துவிடுவோம் என பணியாளர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.