தமிழகம் முழுவதும் கட்டுக்கடங்காமல் உயரும் பெட்ரோல், டீசல் விலை : அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரிப்பு
Oct 27 2021 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டிய பிறகும், கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நடப்பு மாதத்தில் மட்டும் 20-வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், 31 காசு உயர்த்தப்பட்டு 104 ரூபாய் 83 காசுக்கும், டீசல் 33 காசு அதிகரிக்கப்பட்டு 100 ரூபாய் 92 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.