தாதா சாகேப் விருதுடன் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Oct 27 2021 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
டெல்லியில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவின்போது, திரைத் துறையில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் இன்று அதிகாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு திரண்டிருந்த அவரது ரசிகர்கள் சால்வை அணிவித்தும், கோஷங்கள் எழுப்பியும் உற்சாக ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.