19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த ரூ.950 கோடி நிதி மத்திய அரசிடம் கோரப்படும் : மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
Oct 27 2021 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும், அதற்காக 950 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் சுகாதார துறை அமைச்சர்கள், செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு தலைமை மருத்துவமனைக்கும் தலா 50 கோடி ரூபாய் நிதி வழங்க வழிவகை செய்யப்படும் என கூறினார்.