மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 220-வது குருபூஜை விழா : நினைவிடத்தில் அ.ம.மு.க-வினர் மாலை அணிவித்து மரியாதை
Oct 27 2021 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 220-வது குருபூஜை விழாவையொட்டி, காளையார்கோவிலில் உள்ள நினைவிடத்தில் அ.ம.மு.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்படி கழக நிர்வாகிகள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், கழக தலைமை நிலையச் செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான திரு. கே.கே.உமாதேவன், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு. மகேந்திரன், கழக அம்மா பேரவை மாநில செயலாளர் திரு.கா.டேவிட் அண்ணாதுரை, கழக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் துருக்கி திரு.ரபீக்ராஜா, சிவகங்கை மாவட்ட கழக செயலளார் திரு.V. பாண்டி, இராமநாதபுரம் மாவட்ட அமமுக செயலளர்கள் திரு.முனியசாமி, திரு.முருகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.