சுமை தூக்கும் தொழிலாளி ரயிலில் தூக்கிட்டு தற்கொலை : குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்ததாக தகவல்
Oct 27 2021 11:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் நிற்கும் ரயிலில் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜபருல்லாஹ் என்பவர், திருச்சி ரயில்வே ஸ்டேசனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் 4வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாலக்காடு பாசஞ்சர் ரயிலில், ஜபருல்லாஹ் ரயில் பெட்டிக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரயிலை சுத்தப் படுத்துவதற்காக சென்ற தூய்மைப் பணியாளர்கள் இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.