புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பு மாட்டியது
Oct 27 2021 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். கிளிக்குடியை சேர்ந்த அப்பாவு என்பவரது வீட்டு வாயிலில் கோழி ஒன்று நீண்டநேரம் சத்தம் போட்டபடியே இருந்தது. அதை கேட்டு அருகில் சென்று பார்த்தபோது, மிக நீளமான மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பாவு, அதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், 10 அடி நீளமும் 25 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை பிடித்து வனக்கக்காவலர்களிடம் ஒப்படைத்தனர்.