தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Oct 27 2021 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. கடல் பகுதியிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக சுமார் 2 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்களும், 500 விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.