பாம்பன் பகுதி மீனவர் வலையில் டன் கணக்கில் சிக்கிய மத்தி மீன்கள்
Oct 27 2021 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாம்பன் பகுதி மீனவர் வலையில், மருத்துவ குணம் கொண்ட, சிறு மத்தி மீன்கள், டன் கணக்கில் சிக்கின. இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் நாள்தோறும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும் நிலையில், அவர்களது வலையில் 4 டன் அளவுக்கு, சிறு மத்தி மீன்கள் சிக்கியது. வலையில் சிக்கிய மத்தி மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.