சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த விசாரணை கைதி நெஞ்சுவலி காரணமாக உயிரிழப்பு
Oct 27 2021 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த விசாரணை கைதியான கார்த்திக், இன்று அதிகாலை நெஞ்சுவலிப்பதாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர், இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் நகர போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.