தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - அடுத்த 3 தினங்களில் தமிழக கடலோரப்பகுதிக்கு நகரக்கூடும் என வானிலை மையம் தகவல்
Oct 27 2021 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், இதர தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 3 தினங்களில் தமிழக கடற்கரைப் பகுதிக்கு வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் - ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று இன்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.