சேலம் மாவட்டம் ஆத்தூரில் தொடர் மழை காரணமாக கத்தரிக்காய் விளைச்சல் பாதிப்பு
Oct 27 2021 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, கத்தரிக்காய்ச் செடிகளில் பூக்கள் உதிர்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைவாசல் தினசரி காய்கறிச் சந்தை மற்றும் உழவர் சந்தைக்கு கத்தரிக்காய் வரத்து குறைந்து விலை ஏற்றம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான கத்தரிக்காய், தற்போது விலை ஏற்றம் அடைந்து ஒருகிலோ மொத்த விலையில் 40 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 60 ரூபாய்க்கும் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.