விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
Oct 27 2021 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் என்பவர், வீட்டில் பட்டப்பகலில் தனியாக இருந்த சமயம் பார்த்து, 5 பேர் கொண்ட கும்பல், அவரை கயிற்றால் கட்டிப்போட்டு கத்தியைக் காட்டி மிரட்டி, வீட்டில் பீரோவில் இருந்த நான்கரை சவரன் நகை மற்றும் நான்கரை லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய போலீஸார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.