கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Dec 1 2021 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், பொது இடங்களுக்கு வரத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயச்சந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார். மாவட்டத்தில், 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட ஆட்சியர், தடுப்பூசி செலுத்தாதவர்கள், ரேஷன் கடை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 18 இடங்களில் செல்வதற்குத் தடை விதிக்கப்படுவதாகக் கூறினார்.