தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர் - வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்
Dec 2 2021 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த பத்து நாட்களாக பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சாலையில் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீரை அகற்றுவதற்காக வைக்கப்பட்ட மோட்டார் அடிக்கடி பழுதாகி விடுவதால் தண்ணீர் வடியாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.