வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் கசிவால் மின் உற்பத்தி பாதிப்பு - சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாக மின்வாரியம் தகவல்
Dec 2 2021 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடசென்னை அனல் மின் நிலையத்தில், இரண்டாவது நிலை, ஒன்றாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில், முதலாவது நிலையில் 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் ஆயிரத்து 830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,தற்போது இரண்டாம் நிலையின் ஒன்றாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் மின் உற்பத்தி தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.