சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 2-வது நாளாக சோதனை : வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடி
Dec 2 2021 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரி எய்ப்பு புகாரின் பேரில் சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸில், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், நேற்று காலை 15 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும், காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சரவணா செல்வரத்தினம் குழுமங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, மதுரை என 15 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனை நடைபெறும் காரணத்தினால் விற்பனை நடைபெறவில்லை, வாடிக்கையாளர்கள் வந்து திரும்பிச் செல்கின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு சோதனை நடைபெற்று வருகிறது.