கடலூர் திட்டக்குடியில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் : தனியார் பேருந்து ஓட்டுநர் கைது
Dec 2 2021 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
திட்டக்குடியை சேர்ந்தவர் முருகேசன், இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அதேப் பகுதியை சேர்ந்த கலையரசன் என்பவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடலூரிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்துக்கு, தனியார் பேருந்து ஓட்டுநர் வழி விடாமல் சென்றதாக தெரிகிறது. திட்டகுடி வந்தடைந்ததும் இரு ஓட்டுநர்களுக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அரசு பேருந்து ஓட்டுநரை, கலையரசன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பேருந்து ஓட்டுநர் கலையரசனை கைது செய்தனர்.