மதுரையிலுள்ள ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி கட்டிடம் இடியும் அபாயம்
Dec 2 2021 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையிலுள்ள ஹோமியோபதி மருத்துவகல்லூரி இடியும் நிலையில் உள்ளதால் மருத்துவ மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். அடிப்படை வசதியின்றி இன்னலுக்கு ஆளாகும் மாணவர்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்றுவரக்கூடிய நிலையில் கல்லூரி கட்டிடம் முழுவதிலுமாக இடிந்து விழக்கூடிய நிலை உள்ளது. 50ஆண்டுகளை கடந்த பழமையான கட்டிடம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்தோடு மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.