கோவை மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் - தடையை மீறி அஞ்சலி செலுத்த முயன்றவர்கள் கைது
Dec 2 2021 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்ற திராவிடர் பண்பாட்டு கூட்டமைப்பினர் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இறந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் இறந்தவரின் குடும்பத்தினர் மட்டுமே அஞ்சலி செலுத்த போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் தடையை மீறை அஞ்சலி செலுத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.