விஜிபி பொழுதுபோக்கு மையத்தில் நேரிட்ட ராட்டின விபத்தில் சிறுமி உயிரிழந்த விவகாரம் - மீண்டும் விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு
Dec 2 2021 6:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஜிபி பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டின விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கழிபட்டூரை சேர்ந்த பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராட்டினம் சரியாக இயக்கப்படாததால் தூக்கி வீசபட்டு தனது மகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவரை நியமித்து இந்த வழக்கை 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டார்.