மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் கூட்டத்தொடர் - பூர்வாங்கப் பணி தொடக்கம்
Dec 2 2021 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டப்பேரவை கூட்டத்தொடரை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே நடத்துவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை நவீனப்படுத்தப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.