வீட்டினுள் தேங்கியிருந்த மழைநீரில் தவறி விழுந்து உயிரிழப்பு
Dec 2 2021 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியில் வீட்டினுள் தேங்கியிருந்த மழைநீரில் கட்டிலிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய கோபி என்பவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து தவறி கீழே தண்ணீரில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ஜெயகோபி தண்ணீரில் மிதந்து இருப்பதை கண்டு இனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.