லெட்டர் ட்ராயிங் மூலம் திருக்குறள்களிலேயே பிரம்மாண்ட திருவள்ளுவர் ஓவியம் : இளைஞரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு
Jan 10 2022 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் ஆயிரத்து 330 திருக்குறள்களால், திருவள்ளுவரின் உருவத்தை எழுத்து ஓவியமாக படைத்துள்ள இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சந்துரு என்ற இளைஞர், பி.காம் பயின்று வருகிறார். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் திறமை உள்ளவரான சந்துரு, பென்சில் ஓவியம், ஆயில் Painting, லெட்டர் ட்ராயிங் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவியங்களை வரைவதில், கை தேர்ந்தவர் ஆவார். தற்போது ஆயிரத்து 330 திருக்குறள்களை கொண்டு, லெட்டர் ட்ராயிங் மூலம், 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட திருவள்ளுவர் உருவத்தை வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை இவர் 9 நாட்களில் வரைந்துள்ளார். இவரது முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.