கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு - சின்னம்மா சார்பில் களமிறக்கப்பட்ட காளை, வீரர்களை பந்தாடி வாகை சூடியது
Jan 21 2022 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மாவின் ஜல்லிக்கட்டு காளை, மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றிபெற்றது.
கோவை செட்டிபாளையம், புறவழிச்சாலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில், 700 க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கட்டுள்ளன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுடன் வந்தவர்கள் 2 தவணை தடுப்பூசி சான்றிதழ் காண்பித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர். இப் போட்டியில் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மா சார்பில் களமிறக்கப்பட்ட காளை, வீரர்களை பந்தாடி வெற்றி பெற்றது.
அடுத்ததாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் சார்பில் களமிறக்கப்பட்ட காளையும், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் பாய்ந்து சென்று வெற்றிபெற்றது.
ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், அண்டா, ஹாட் பாக்ஸ், சைக்கிள், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.