வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகாரிப்பு
Jan 21 2022 4:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகாரித்துள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில், ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான சீசன் காலங்களில், ரஷ்யா, ஐரோப்பா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான பறவைகள் இளைப்பாறுவதற்காக இங்கு வந்து செல்கின்றன.
கோடியக்கரையில் கடந்த ஜனவரி மாதம் பெய்த மழை காரணமாக, பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, ஆர்டிக் குளிர் பிரதேசத்திலிருந்து மண்டை உள்ளான், கொசு உள்ளான், கரண்டி உள்ளான் உள்ளிட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்துள்ளன.