ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் கர்நாடகா மது பாக்கெட்டுகளை விற்ற நபர் கைது
Jan 21 2022 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலை கிராமத்தில் கர்நாடகா மது விற்பணை செய்வதாக ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தலமலை கிராமத்தில் சென்று விசாரித்தபோது மஞ்சுநாதன் என்பவர், கர்நாடகாவில் இருந்து மது பாக்கெட் வாங்கி வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது வீட்டை சோதனை செய்ததில் 48 கர்நாடகா மது பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.