திருப்பூர்: நகர்ப்புற மருத்துவமனையை கொரோனா வார்டாக மாற்ற எதிர்ப்பு
Jan 21 2022 6:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரத்தில், மாநகராட்சி நகர்ப்புற மருத்துவமனையை கொரோனா வார்டாக பயன்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இம்மருத்துவமனையில் 5 வார்டுகளைச் சேர்ந்த மக்கள் மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ உதவிகளைப் பெற்று வருகின்றனர். இதனை கொரோனா வார்டாக மாற்றினால் கடும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, அப்பகுதி மக்கள், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.