ஈரோடு: பவானி அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த நபர் கைது
Jan 21 2022 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் பவானி அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். பவானியை அடுத்துள்ள லட்சுமி நகரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கணேசனின் மனைவி வளர்மதி, நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய கணேசன், வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் வளர்மதி இறந்துகிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்தனர்.