ஈரோட்டில் கள் இறக்க அனுமதி அளிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
Jan 21 2022 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோட்டில், கள் இறக்க அனுமதி அளிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கள் இறக்கும் அறவழிப்போராட்டம் நடத்தப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவித்த நிலையில், இதற்கு பல்வேறு கட்கிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கள் இறக்க சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பனங்காட்டு படை கட்சியினர், ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.