வேளாங்கண்ணியில் 2 மயில்கள் இறப்பு - விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என விசாரணை
Jan 21 2022 6:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 2 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. வேளாங்கண்ணி அடுத்துள்ள சக்தி விநாயகர் கோயில் தெரு பகுதியில் உள்ள மாந்தோப்பில், இரண்டு பெண் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், இறந்த மயில்களைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனை செய்தனர். மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.