தண்ணீரின் மூலக்கூறு பார்முலாவை 2022 முறை எழுதி சாதனை : கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்
Mar 22 2022 8:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மயிலாடுதுறையைச் சேர்ந்த நான்கரை வயது சிறுவன் தண்ணீரின் மூலக்கூறு பார்முலாவை 2 ஆயிரத்து 22 முறை எழுதி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
உலக தண்ணீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த கே.சாய்மித்ரன் என்கிற நான்கரை வயது சிறுவன், தண்ணீரின் மூலக்கூறு வடிவமான H2O பார்முலாவை நான்கரை மணி நேரத்தில், 2 ஆயிரத்து 22 முறை எழுதி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் இந்த சாதனையை படைத்துள்ளார். கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.