அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் கலங்க வேண்டியதில்லை - ஒன்றுபட்ட அ.இ.அ.தி.மு.க.வை உருவாக்கி அம்மாவின் ஆட்சியை அமைப்போம் : அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா
May 18 2022 10:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் கலங்க வேண்டிய அவசியமில்லை என்றும், கழகத்தினர் எத்தனை குழுக்களாகப் பிரிந்திருந்தாலும், தன்னைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரையும் தங்களுடைய பிள்ளைகள்தான் என்றும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட அ.இ.அ.தி.மு.க.வை உருவாக்கி புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை அமைத்து, மக்களுக்கான ஆட்சியாக நடத்த வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என சின்னம்மா குறிப்பிட்டார்.