நாகர்கோவில் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை கண்டித்து பெண் போராட்டம்
May 18 2022 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகர்கோவில் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை கண்டித்து, பெண் ஒருவர் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி. தூய்மை பணியாளரான அவர், இன்று காலை பணிகளை முடித்துக் கொண்டு வீடு செல்ல, பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து, நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயராணி, குளச்சல் பேருந்து நிலையம் வந்து, தன்னை ஏற்றிச் செல்லாத பேருந்து ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பேருந்தை இயக்கவிடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஜெயராணியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.