கிருஷ்ணகிரி: மழையால் மலைக்கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தார்ச்சாலை முற்றிலும் சேதம்
May 18 2022 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி அருகே தொடர் மழையால் மலைக்கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தார்ச்சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாரளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏகல்நத்தம் மலைக் கிராமத்தில் தொடர் மழையால், கிராமத்திற்குச் செல்லும் பாதையான இரண்டாவது கொண்டை ஊசி வளைவில், முழுவதுமாக பழுதடைந்து மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தரை பாலத்திற்கு மேல் சுமார் 5 அடி உயரத்திற்கு மழை நீர் செல்வதால், மக்கள் சென்று வர முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பழுதடைந்துள்ள தார் சாலையை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என்றும். தரைப் பாலத்தின் மேல் சிறு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஓசூர் அருகே பேகேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பாகூர் கிராமத்தில் வசித்து வரும் எல்லம்மாள் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது. கணவரை இழந்து வாழ்ந்து வரும் எல்லம்மாள், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூலி வேலை செய்து வரும் நிலையில், வீடு சேதமடைந்துள்ளதால் தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.