சென்னை: நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நரிக்குறவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு
May 18 2022 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தங்களது நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்காத ஆவடி காவல்துறை ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நரிக்குறவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சென்னை சோழாவரம் பகுதியில் உள்ள கிருதலாபுரம் கிராமத்தில் 1975ஆம் ஆண்டு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ராணிப்பேட்டை சிங் என்பவருக்கு அப்போதய தமிழக அரசு 4 ஏக்கர் நிலத்தை பட்டாவுடன் வழங்கியது. அவர் இறந்தவுடன், நிலத்தை விற்பனை செய்ய தங்கள் சமூகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை சிங்கின் குடும்பத்தினர் நாடியுள்ளனர். ஆனால், கார்த்திகேயன், போலி ஆவணம்மூலம் நிலத்தை விற்று பணத்தை பெற்று, சிங்கின் குடும்பத்தை ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து சோழவரம் காவல்துறையினரிடமும், ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்தவிட நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆகவே, தங்களது நிலத்தை அபகரித்தவர் மீதும், புகார் மீது நடவடிக்கை எடுக்காத ஆவடி காவல்துறை ஆணையர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நரிக்குறவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.