திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

May 18 2022 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறி, அதிகாலையில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டம், ஒழுங்குமுறை விதிகள், உரிம நிபந்தனைகள்படி, அதிகாலை 1 மணி காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையிடக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை மீறி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் காலை 9 மணிக்கு முன்பாக திரையிடுவதாகவும், அந்த காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலித்து, வரி ஏய்ப்பு செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இன்றைய விசாரணையின் போது, தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டதுடன், விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசும், காவல்துறையும் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00