கொண்டக்‍கரை அ.தி.மு.க ஊராட்சி மன்றத்தலைவர் வெட்டிக்‍கொல்லப்பட்ட வழக்கு : 12 பேர் புழல் சிறையில் அடைப்பு; கத்தி, செல்போன் பறிமுதல்

May 18 2022 7:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே, கொண்டக்‍கரை அ.தி.மு.க ஊராட்சி மன்றத்தலைவர் வெட்டிக்‍கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீஞ்சூர் அருகே கொண்டக்‍கரை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை மர்மக்‍கும்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டிச் சாய்த்தது. அவரது உடலை போலீசார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்‍காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வெள்ளிவாயல் சாவடியை சேர்ந்த சுந்தர் என்ற சுந்தரபாண்டியன், லாரி ஓட்டுநர் பத்மநாபன் உள்ளிட்ட 12 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய லாரி, 7 கத்தி மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00