சென்னை ஆதம்பாக்‍கத்தில் மூதாட்டி வெட்டிக்‍கொல்லப்பட்ட சம்பவத்தில் கஞ்சா போதை நபர் கைது

May 18 2022 7:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஆதம்பாக்‍கம் பகுதியில் மூதாட்டி வெட்டிக்‍கொல்லப்பட்ட சம்பவத்தில் கஞ்சா போதை நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் 60 வயது மூதாட்டி வெள்ளம்மாள். இவரது வீட்டிற்கு எதிரே வசிக்‍கும் குமார் - அம்மாயியின் மகன் விக்‍னேஷ், அருகில் உள்ள வீட்டில் வசிக்‍கும் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். கஞ்சா போதையில் இருந்துள்ள விக்‍னேஷ், மாணவியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், வீட்டின் உரிமையாளரை வெட்டுவதாகக்‍ கூறி கத்தியுடன் தெருவில் ஓடியுள்ளார். வீட்டு உரிமையாளரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த வெள்ளம்மாளை விக்‍னேஷ் கத்தியால் தாக்‍கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கஞ்சா போதையில் மூதாட்டியை வெட்டி விட்டு தப்பிச் சென்ற விக்னேஷ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00