அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பது சரியல்ல - தமிழக அரசுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்
May 26 2022 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தி.மு.க அரசு இழுத்தடித்து வருவதால், அவர்கள் ஊதியமின்றி செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தி.மு.க அரசு இழுத்தடித்து வருவது சரியானதல்ல என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு அதன்படி செயல்படாமல், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என காரணம் காட்டி காலம் தாழ்த்தி வருவதால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியமின்றி செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளர். எனவே, தி.மு.க அரசு இந்தப் பணியிடங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து உரிய ஊதியம் அவர்களுக்கு கிடைப்பதற்கு வழிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.