வாணியம்பாடி அருகே மேம்பாலத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - 2 டன் திராட்சை பழங்கள் சேதம்
May 26 2022 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், சரக்கு வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 2 டன் திராட்சை பழங்கள், சாலையில் சிதறி சேதமடைந்தன.
கர்நாடகா மாநிலம் கே.ஜி.எஃப் என்ற பகுதியிலிருந்து 2 டன் திராட்சை பழங்களை ஏற்றிக்கொண்டு, ஆம்பூரை அடுத்த மாதனூர் நோக்கி, சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், மேம்பால தடுப்பு வேலியில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 டன் திராட்சை பழங்கள், சாலை எங்கிலும் சிதறி வீணாகின. இந்த விபத்தில் ஓட்டுநர் சந்தோஷ், கிளீனர் சரவணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.