மதுரையில் மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் : அடிப்படை வசதிகள் குறித்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை எனப் புகார்
May 26 2022 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மேயர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் துர்கா காலனி பகுதியில் மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில் நல்வாழ்வு மையத்திற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதைக் கண்ட பொதுமக்கள், தங்கள் பகுதியில் பூமி பூஜை நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் அதிகாரிகள் அங்கிருந்து செல்ல முற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அங்கு வந்த மேயர் காரை முற்றுகையிட்டனர்.
திருப்பரங்குன்றம் துர்கா காலனி, ஜேஜே நகர் பகுதிகளில் சாலை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் இலவச கழிவறை இல்லாதது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர். நல்வாழ்வு மையம் அமைக்க பூமிபூஜை வைப்பது நியாயமா? என்றும் கேள்வி எழுப்பினர்.