சென்னை அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 7 இளைஞர்கள் : போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றபோது கைது
May 26 2022 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கொரட்டூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 7 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொரட்டூரை அடுத்த மாதனாங்குப்பத்தில், பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் 7 பேர் தங்கியிருந்த இடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற, ஆவடி பிரகாஷ், புத்தாகரம் ஜெயக்குமார், கல்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், வில்லிவாக்கம் பாலகிருஷ்ணன், உள்ளிட்ட 7 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போது, பெரம்பூரை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து 5 ஆசிட் பாட்டில்கள், 5 இருசக்கர வாகனம், 7 செல்போன்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் 11 கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.