சென்னை அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 7 இளைஞர்கள் : போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றபோது கைது

May 26 2022 2:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை கொரட்டூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 7 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொரட்டூரை அடுத்த மாதனாங்குப்பத்தில், பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் 7 பேர் தங்கியிருந்த இடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற, ஆவடி பிரகாஷ், புத்தாகரம் ஜெயக்குமார், கல்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், வில்லிவாக்கம் பாலகிருஷ்ணன், உள்ளிட்ட 7 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போது, பெரம்பூரை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து 5 ஆசிட் பாட்டில்கள், 5 இருசக்கர வாகனம், 7 செல்போன்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் 11 கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00