நூல் விலை உயர்வைக் கண்டித்து விருதுநகரில் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள், சிறு விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
May 26 2022 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நூல் விலை உயர்வைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டியில் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள், சிறு விசைத்தறி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் மருத்துவ பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிலில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூலம் 5 ஆயிரம் விசைத்தறிகளில் மருத்துவ பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்களும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நூல் விலை ஏற்றத்தால் ஆர்டர்களுக்கு உற்பத்தி செய்து வழங்குவதில் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். நூல் விலை உயர்வை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த வலியுறுத்தி சத்திரப்பட்டி பகுதியில் செயல்படும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பேண்டேஜ் துணி உற்பத்தி விசைத்தறிகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விசைத்தறிகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தினர், இன்று 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.